“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

0
119
"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய பொழுது அதிக அளவு இளைஞர்கள் கொண்ட கட்சியாக பாமக திகழ்கிறது என தெரியவந்துள்ளது.

அதேபோல மக்களின் வளர்ச்சி தான் ஒரு கட்சியின் மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் தமிழக மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாமக ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் சமச்சீர் கல்வி திட்டம், இட ஒதுக்கீடு, 108 ஆம்புலன்ஸ் திட்டம், லாட்டரி தடை சட்டம் என ஒவ்வொன்றும் பாமக வலியுறுத்தி கிடைத்த வெற்றியே என்று கூறினார்.

மேலும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு கட்டாயம் பதவி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் பல கட்சிகள் தங்களின் விளம்பரத்திற்காகவே அரசியல் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி  தற்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் பல கட்சிகள் என்ன செய்கிறது என்பதை நாம் ஊடகம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளது.

மக்களின் தேவைகளை புரிந்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்காமல் ஒருவர் அடுக்குமொழியின் வசனங்கள் பேசியும், மற்றொருவர் நான் இவ்வளவு விலையில் வாட்ச் அணிந்து இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதையே குறியாக வைத்துள்ளனர்.

பல நலத்திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாமக முக்கிய காரணமாக இருப்பதால் தமிழக மக்களுக்கு நம்மளை விட்டு வேறு வழி இல்லை என்று கூறினார்.

தற்பொழுது அதிமுக நான்காக பிளவுப்பட்டுள்ளது. மேலும் ஆளும் கட்சி மீதும் பல குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளது. நாம் எடுக்கும் கட்சியின் கொள்கைகள் எத்தனை மக்களை சென்றடைகிறது என்பதை எண்ண வேண்டுமே தவிர எத்தனை கொள்கைகளை கூறுகிறோம் என்பது முக்கியமல்ல.

இதர பிரிவினர் போல் நமக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் நாம் 20 விழுக்காடு கேட்ட பொழுது கூட வெறும் 10.5 விழுக்காடு தான் நமக்கென்று கொடுத்தார்கள். பின்பு அதனையும் விடாமல் நம்மிடம் இருந்து அதனை ரத்து செய்து விட்டார்கள்.

மீண்டும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார். மேலும் என்எல்சி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு  அதற்கான நிலமெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதை ஒரு பொழுதும் பாமக ஒப்புக்கொள்ளாது. இங்கிருந்து ஒரு படி மண் கூட எடுக்க விடமாட்டோம் என்று பேசி 18 தீர்மானங்கள் நிறைவேற்றி உத்தரவிட்டனர்.

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளை நிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும்.
  • தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்.
  • அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  • மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
  • வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
  • கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக அரசு பள்ளிகளில் ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.
  • நீட் தேர்விலிருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
  • இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப் படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
  • சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்.
  • புதுச்சேரியில் பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
  • புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.