பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

0
82
can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband
can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த இளம் பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அழைத்தார். அந்த புகாரில் அவர் எனது தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் எனது கணவர் பசவனகுடி பகுதியை  சேர்ந்த சந்தீப் ஆவார். எங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

எங்களின் திருமணத்திற்காக எனது தந்தை ஆறு கோடி செலவு செய்து ஆடம்பரமாக நடத்தினார். மேலும் திருமணத்தின் போது என கணவர் சந்தீப்புக்கு 2 கிலோ வெள்ளி ,4 கிலோ தங்கம், மேலும் 50 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக எனது கணவர் என்னிடம்  அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்த நிலையில் எனது பெற்றோரிடமும் தகராறு ஈடுபட்டு வந்தார்.

மேலும் வரதட்சனை கொடுக்க மறுத்ததால் எனது கணவர் குடிபழக்கத்திற்கு   அடிமையாகி உள்ளார். அவர் தினமும் குடித்துவிட்டு எனது தலையில் சிறுநீர் கழித்து வருகிறார் எனவும் அந்த இளம் பெண் கூறியிருந்தார்.  மேலும் அவர் எனக்கு மனதளவில் தொல்லை கொடுப்பதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறியிருந்தால்  அந்த புகாரின் பேரில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K