வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

0
39

 

வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

 

கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

 

தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை மறுநாள் நிலவில் இறங்க உள்ளது.

 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் விண்ணில் வந்த சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்வை ஏற்படுத்தி உள்ளது. இவை இரண்டும் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

ஆர்பிட்டர் தற்போது 100 கிமீ x 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரிலிருந்து பூமிக்கு தரவுகளை அனுப்ப இது பயன்படும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே சிவன் பேசுகையல், கடந்த முறை நடைபெற்ற தருமணம் மிகவும் கவலையை அளித்தது. இந்த முறை ஒரு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
Gayathri