பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!

0
90

பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் பெண் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியும் டிக்கெட் எடுக்காமல் சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே மதனப்பள்ளியில் பேருந்தில் கடந்த செவ்வாய் தினத்தன்று சிவாரெட்டி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் பெண் நடத்துனர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு சிவாரெட்டியிடம் டிக்கெட் வாங்கச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு சிவா பயணச்சீட்டை வாங்காமல் அமைதியாக இருந்துள்ளார். ( அல்லது சிவா நடத்துனரை கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை)

எல்லோரும் டிக்கெட் வாங்கும் போது நீங்கள் ஏன் வாங்கவில்லை என்று பெண் நடத்துனர் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சிவாரெட்டி பெண் நடத்துனரை திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு கீழே இறங்கி கைகலப்பு அதிகமானது. இதில் பெண் நடத்துனரில் சட்டையை பிடித்து சிவாரெட்டி இழுத்துள்ளதை படங்களின் மூலம் காணமுடிகிறது.

இதனையடுத்து பொறுமையிழந்த சக பயணிகள் சிவாரெட்டியை சூழ்ந்து தர்ம அடி கொடுத்து அப்பகுதி வால்மீகிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைகலப்பில் பெண் நடத்துனருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார். இச்சம்பவத்தை அறிந்த ஆர்.டி.சி தொழிலாளர் சங்கம் பெண் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து, குற்றவாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பெண் நடத்துனரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகில் எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும் அவர்களின் வேலைகளுக்கு சில தடைகளும் பிரச்சினைகளும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran