இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

0
76

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், துரை நகர் அருகே வாணியம்பாடி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. அவருக்கு வயது 40. அவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 34. இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பகட்டுபாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில், சரஸ்வதி கைக்குழந்தையுடன் தன் கணவர் சிவாவின் சகோதரி சுமித்ரா மற்றும் அவரது மகன் திருப்பதி ஆகிய நால்வரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் அருகே துறை நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அரசு பேருந்தில் இரு சக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி நான்கு பேரும் கீழே விழுந்ததில், பேருந்தின் சக்கரம் சுமித்ராவின் தலைமீது ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

மற்ற மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.