இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பூம்ரா & கோ… 50 ஓவர்களில் முடிந்த போட்டி!

0
68

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பூம்ரா & கோ… 50 ஓவர்களில் முடிந்த போட்டி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து நேற்று ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆரம்பமே அமர்க்களமாக முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் பூம்ரா.

அதையடுத்து வந்த ஓவர்களில் அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினார். இதனால் 25 ஓவர்களுக்குள்ளாக 110 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்திய அணியின் பூம்ரா 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் இலக்கை எட்ட்டி வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.