அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

0
108

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

2020-21 ஆம் வருடத்தின் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்யட உள்ளது. பொது பட்ஜெட் குறித்தான தகவல்களை தயாரிக்கும் ஊழியர்கள், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வெளி நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று விதிமுறை உள்ளது.

பட்ஜெட் உரை தயாரிக்கும் முன்பு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி தொடர்வது வழக்கமாக நடைபெறும் வழிமுறையாகும். இதன் பொருட்டு, பட்ஜெட் குறித்த தகவலை அச்சேற்றும் மத்திய நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா வழங்கி அச்சேற்றும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

author avatar
Jayachandiran