மது விருந்து நடத்திய விவகாரம்! நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன்!

0
101

இங்கிலாந்து நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

கடந்த 2020-ம் வருடம் நோய்த்தொற்றுக்கு எதிராக இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமர் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார்.

இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததால் அவருடைய தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதேபோல இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிளிப்பின் இறுதிச் சடங்கின்போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

ஆகவே இந்த இரு விவகாரங்களை முன்வைத்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று சொந்த கட்சியை சார்ந்தவர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள், இதன் காரணமாக, அவருக்கு நெருக்கடி உண்டானது.

ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று அந்த நாட்டில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும் ,148 பேர் அவருக்கு எதிராகவும், வாக்களித்தனர்.

பெரும்பான்மையினடிப்படையில் போரிஸ் வெற்றி பெற்றார், 59 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.