BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

0
129
BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!
BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்க ஆரம்பித்த கொரோனா தொற்றானது இவ்வாண்டு கொரோனா 2 வது அலையாக உருவாகி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு இத்தொற்று பரவிய வேகத்தை விட இந்தாண்டு அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது.

முதலில் அதிக தொற்றும் பரவும் நேரத்திலேயே மார்ச் 8-ம் தேதி தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.அப்போது பல ஊரடங்கை அறிவிக்காமல் பல கட்டுப்பாடுகளை நிறுவினர். மதம் சார்ந்த கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளனர்.முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தனர்.

இவ்வாறு பல செயல்முறைகளை செலுத்தியும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அதற்கடுத்து இன்று முதலமைச்சர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.அதில் அவர் கூறியதாவது,நாளை மறுநாள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.உணவு கடைகள் காலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி  வரை நடக்கும்.முக்கியமாக பார்சல் வசதியை மேற்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி உட்கார்ந்து சாப்பிட அதிகபடியானோர் கூடாமல், உணவு சாப்பிடுவதற்கு  மட்டுமே அனுமதி கூறியுள்ளனர்.

வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.அப்போது உணவு கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும்,மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும்,இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் நடத்த அனுமதி தந்துள்ளனர்.முழு ஊரடங்கின் போது இறைச்சி கடைகள்,மீன் மார்க்கெட்,காய்கறி கடைகள்,சினிமா தியேட்டர்கள்,வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி கிடையாது.அதுமட்டுமின்றி மற்ற இரவு நேர ஊரடங்கின் போது துணி கடைகள் சார்ந்த நிறுவனங்கள்,மால்கள் அனைத்திலும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி தந்துள்ளனர்.