விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

0
71
Tragedy caused by drug overdose? Body charcoal death !!
Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சீலையின் ஒரு பகுதி முந்தானையானது குத்து விளக்கு மேல் விழுந்தது. விளக்கில் பற்றிய தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.அச்சத்தில் கத்தி கூச்சல் போட்டார்.

மாடியில் இருந்த அவருடைய கனவன் வருகையில் பாதி உடல் எரிந்து நிலையில் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடி வந்தார்கள். உடனே அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் மெதுவாக குணமாகி வந்துள்ளார். அஸ்வினி தன் தாய் வீட்டில் இருந்து மேலும் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று ஒரு நாள் அஸ்வினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.உடனே பெற்றோர் அவரை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வினி ஏற்கவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.இச்சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அஸ்வினிக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளே ஆவதால் தற்செயலாக நடந்த விபத்தா அல்லது கொலையா என்று கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மேல் விசாரணை நடத்த உள்ளார்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
Parthipan K