ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

0
102

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரு மனிதனுக்கு இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சமமாக இரண்டு கண்களும் முக்கியம் தான். ஒரு சிலருக்கு பிறவியிலேயே கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு விபத்தின் காரணமாக கூட கண்பார்வை பாதிப்படைந்திருக்கும். ஆனால் கண் பார்வை குறைபாடு என்பது நாம் அதிகம் தொலைக்காட்சி செல்போன் போன்றவை பார்த்துக் கொண்டிருப்பதனால் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மங்கலாக தெரியும் பொழுதே அதனை அலட்சியம் செய்யாமல் சரியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் கண் பார்வை குறைபாட்டில் இருந்து நாம் விடுபடலாம்.அதற்கு என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கி பார்வையை தெளிவுபடுத்துவதற்கு உதவும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

முதல் முருங்கைக்கீரை, கருவேப்பிலை, பசலைக்கீரை ,கொத்தமல்லி இந்த உணவுகளில் நம் கண் பார்வையை அதிகரிக்க கூடிய விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக் கீரையை வாரத்தில் இரு முறை ஏதேனும் ஒரு உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அடுத்ததாக கருவேப்பிலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கொய்யாப்பழம். விட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. முடிந்த வரையில் தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட வேண்டும். தினம்தோறும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும். அதனை இரவில் நன்கு ஊற வைத்து காலையில் எழுந்து தோலை நீக்க வேண்டும்.

தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வர உங்கள் கண் பார்வை குறைபாடு நீங்க தொடங்கும். இதில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் ஏ சத்துக்கள், பீட்டா கரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் வால்நட் சாப்பிட வேண்டும் அனைத்து கண் பிரச்சனைகளும் தீரும்.

 

 

author avatar
Parthipan K