வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
Home Blog

அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0

அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1100 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை(பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்)

நிறுவனம்: அங்கன்வாடி

பணி:

1)உதவியாளர்
2)மேற்பார்வையாளர்
3)ஆசிரியர்
4)பணியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1100

கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் 18 வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்.அதிகப்பட்ச வயது 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://wcd.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!

0

உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!

மலச்சிக்கல் பிரச்சனையை உங்களில் பலர் சந்தித்து வருகின்றனர்.அதிக மன அழுத்தம் மலச்சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வு சொல்கிறது.

மலச்சிக்கல் அறிகுறிகள்:-

*முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு
*வயிறு உப்பசம்
*வறண்ட மலம்
*மலம் கழிப்பதில் சிரமம்

மலச்சிக்கலை போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள்
2)ஆமணக்கு எண்ணெய்

செய்முறை:-

ஒரு முழு ஆப்பிளை தோல் நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நாறுக்கிக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.

இந்த ஆப்பிள் சாற்றில் 3 அல்லது 5 துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கலுக்கு சில நிமிடங்களில் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூசணி விதை
2)வேர்க்கடலை

செய்முறை:-

ஒரு ஸ்பூன் பூசணி விதை மற்றும் ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை வாணலியில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வறுத்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலக் குடலில் அடைபட்டு கிடக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.பூசணி மற்றும் வேர்க்கடலை மெக்னீசியம் சத்துக்கள் கொண்ட பொருட்கள் ஆகும்.

மெக்னீசியம் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படும் என்பதினால் மெக்னீசியம் சத்துக்கள் கொண்ட பொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ஆப்ரேஷனே இல்லாமல் சிறுநீரக கற்களை கரைய வைக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

0

ஆப்ரேஷனே இல்லாமல் சிறுநீரக கற்களை கரைய வைக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு முழுமையாக குணமாக இந்த எளிய வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)சீரகம்
3)வாழைத்தண்டு

செய்முறை:-

ஒரு துண்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)ஆப்பிள்
3)புதினா
4)இஞ்சி
5)மஞ்சள்
6)உப்பு

செய்முறை:-

ஒரு வெள்ளரிக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதேபோல் ஒரு ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1/4 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து நறுக்கிய வெள்ளரி மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு அலசி ஒரு தட்டில் வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் நறுக்கிய ஆப்பிள்,வெள்ளரி துண்டுகளை போடவும்.பின்னர் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது புதினா இலை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சிறுநீரகத்தில் படிந்து கிடந்த கற்கள் பனி கட்டிபோல் கரைந்து சிறுநீர் வழியாக வந்துவிடும்.

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் 3 மாதம் வரை கெட்டு போகாத மாங்காய் தொக்கு – எப்படி செய்தால் எச்சில் ஊறவைக்கும்!!

0

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் 3 மாதம் வரை கெட்டு போகாத மாங்காய் தொக்கு – எப்படி செய்தால் எச்சில் ஊறவைக்கும்!!

பச்சை மாங்காயில் சுவையான தொக்கு கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை மாங்காய் – 1
2)எள் எண்ணெய் – 4 தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
4)மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)கடுகு – 1/2 தேக்கரண்டி
7)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
8)பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பச்சை மாங்காயை கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் விதையை நீக்கிவிட்டு ஒரு காய்கறி சீவல் கொண்டு மாங்காயை சீவிக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீவி வைத்துள்ள மாங்காயை போட்டு மஞ்சள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு சட்டி வைத்து 4 தேக்கரண்டி எள் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.

அதன் பிறகு ஊறவைத்த மாங்காய் துருவலை போட்டு வதக்கவும்.பிறகு அரைத்த வெந்தயப் பொடி,பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.மாங்காயில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த தொக்கை ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமிக்கவும்.இவை சூடான சாதம்,சப்பாத்தி,தயிர் சாதம் ஆகியவற்றிற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

0

அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது மூட்டு வலி என்பது முதியவர்களுக்கு மட்டும் அல்ல இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்து விட்டது.இதை எந்த ஒரு செலவும் இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)நொச்சி இலை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை மிக்ஸி ஜாரில் போட்டுசிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.அம்மியில் அரைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது மஞ்சள் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.இதை மூட்டு பகுதியில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டு கட்டவும்.

இதை இரவு நேரத்தில் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் மூட்டு வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி பிரண்டையை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் தண்ணீரில் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை மூட்டு பகுதியில் தடவி வந்தால் மூட்டு வலி,வீக்கம்,தேய்மானம் ஆகியவை சரியாகும்.

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! 

0

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!!

தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் பாமக-வை சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வேப்பமனு தாக்கல் ஆனது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று அதுகுறித்து பரிசீலனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பரிசீலணையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவிற்கு அப்பாற்பட்டு இருந்தால் அவர்களது வேட்பு மனுவானது நிராகரிக்கப்படும்.அதன்படி தற்பொழுது திமுக சார்பாக வேட்பு மனு செய்திருந்த டி எம் செல்வகணபதியின் வேட்பு மனுவானது நிராகரிக்கும் பட்சத்தில் உள்ளது.

ஏனென்றால் இவரது வாக்குரிமையானது இரண்டு இடங்களில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து விசாரணை செய்கையில், இரண்டு வாக்குரிமை உள்ளது உறுதியாகி உள்ளது.டி எம் செல்வகணபதி தான் அளித்த வேட்புமனுவில் இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது குறித்து குறிப்பிட்டு இருந்தால் இவரது வேட்பு மனுவானது நிராகரிக்கப்படாது என்றும் அல்லது குறிப்பிடப்படாமல் இருந்தால்  பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 17, 18 படி இது கிரிமினல் குற்றம் என்பதால் கட்டாயம் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

டி எம் செல்வகணபதி தற்பொழுது புதிய இடத்தில் குடி பெயர்ந்து உள்ளதால் அங்கு ஒரு வாக்குரிமை இருப்பதாகவும் முன்பு குடியிருந்த இடத்தில் ஓர் வாக்குரிமை இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.இவரது மனு தாக்கல் நிராகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.மேற்கொண்டு இந்த இரட்டை வாக்குரிமை குறித்து விளக்கம் தரக்கோரி கேட்டுள்ளனர்.

மாணவர்கள் கவனத்திற்கு.. இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!! வெளியான திடீர் அறிவிப்பு!! 

0

மாணவர்கள் கவனத்திற்கு.. இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!! வெளியான திடீர் அறிவிப்பு!!

நடப்பு கல்வியாண்டு முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றை சாளர சேர்க்கை முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த ஒற்றைசாளரை முறை அதாவது கவுன்சிலிங் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த ஒற்றைசாளர முறையால் மாணவர்கள் அனைவருக்கும் தரவரிசை முறைப்படி சேர்க்கை நடைபெறும்.அது மட்டுமின்றி இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவினையானது ஒதுக்கப்படும்.இவ்வாறு செய்வதால் இதில் கலந்துக்கொள்ளும் மாணவருக்கு முதலில் படாப்பிரிவானது ஒதுக்கப்படமால் அடுத்த மாணவருக்கு ஒதுக்க இயலாது.

அந்த வகையில் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது தனியாக விண்ணப்பித்து வந்தனர்.ஆனால் இனி நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் அனைவருக்கும் இந்த ஒற்றை சாளர முறையில்(Single Window Admission System) சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது,

கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System), போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஏதுவாக பின்வரும் கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

0

டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியாவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள “Faculty” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 05.04.2024 வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Faculty

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: Faculty பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Contract

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Faculty என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கடைசி தேதி: 05.04.2024

90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!

0

90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!

உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டும்.அதற்கு எலும்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும்.

கால்சியம் சத்து குறைந்தால் இளமை காலத்திலேயே மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,கை கால் வலி ஆகிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பில் கால்சியம் சத்து அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சத்து உருண்டையை செய்து சாப்பிட்டு வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரியம்(ராகி) மாவு – 1 கப்
2)ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
3)முந்திரி பருப்பு – 10
4)நெய் – சிறிதளவு
5)உப்பு – தேவையான அளவு
6)வேர்க்கடலை – 1/2 கப்
7)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிதளவு நெய் சேர்த்து சூடாக்கவும்.அதன் பின்னர் ஒரு கப் ராகி மாவு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.

அதன் பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.பிறகு அதே வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.பிறகு அதில் 1 ஏலக்காய்,1/4 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி கையில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!

0

முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலையில் புதிய முடி வளர வைக்க இந்த எண்ணெயை தயாரித்து தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய்
2)தேங்காய் எண்ணெய்
3)நல்லெண்ணெய்
4)கருஞ்சீரகம்
5)கறிவேப்பிலை

செய்முறை:-

பத்து பெரிய நெல்லிக்காயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1/4 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை வாணலியில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகம் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.பிறகு அதில் நறுக்கிய பெரு நெல்லிக்காயை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அரைத்த கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகப் பொடியை சேர்க்கவும்.அதன் பின்னர் அரைத்த நெல்லிக்காய் பேஸ்ட்டை அதில் சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் இரவு தலைக்கு அப்ளை செய்து வாந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.