பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

0
83

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

திமுகவின் எம்பி ஆர் எஸ் பாரதி முன்பு பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், கோயிலில் திமுக கட்சியினர் போடுகின்ற காணிக்கை வைத்துதான் ஐயர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தொலைக்காட்சி செய்திகள் விபச்சார விடுதியை போல் செயல்படுவதாகவும், ஆதி திராவிடர்கள் நீதிமன்றங்களில் நீதியாக இருப்பதற்கு திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று விமர்சனம் செய்திருந்தார். பாஜகவின் எச்.ராஜாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல்வேறு ஆதாரங்களுடன் திமுகவை வெளுத்து வாங்கியுள்ளார். அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்படுள்ளதாவது:

1) 1967ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது தி மு க வால் என்பதை மறந்து விட வேண்டாம்.

2) 1971ம் ஆண்டு ‘காஷ்மீரத்து பாப்பாத்தி’ என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் தி மு க ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்து விட்டதா தி மு க?

https://www.facebook.com/1474859992810579/posts/2259806510982586/

3) 1989 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம் ஜி ஆர் என்ற இரு பார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, தி மு க ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

4) 1996 ம் ஆண்டு ‘சோ’ என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று தி மு க வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா?


5) 2006 ம் ஆண்டு நான் ‘பூணூல் அணிந்த பார்ப்பனன்’ என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ‘மைனாரிட்டி ‘ ஆட்சியை தி மு க வால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா?

6) மேலும்,1999 ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் தி மு க மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக்கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

7) பதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த ‘பார்ப்பனர்களை’ நாய்கள் என்றுஅழைக்கிறீர்களே தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்?

தவறு செய்து விட்டீர்கள் ஆர் எஸ் பாரதி அவர்களே, தவறு செய்து விட்டடீர்கள்.

இவ்வாறு தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachandiran