புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!!

0
225
#image_title

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!!

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று புதுச்சேரி பேரவைக்குள் ஒரு மினி லாரி வந்து நின்றது அதில் மிகப்பெரிய அளவில் நிறைய பலாப்பழங்கள் இருந்தது.

இதை கண்ட அனைவரும் ஏதோ அரசு திட்டம் எதாவது தொடஙக இருக்கின்றார்களா என ஆவலோடு பார்த்து இருந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள் பலாப்பழத்தினை இறக்கி ஒரு எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என அனைத்து எம்.எல்.ஏ அலுவலகத்திற்கும் வினியோகித்தனர்.

பேரவை கூட்டம் முடிந்தவுடன் அனைத்து அமைச்சர்களுக்கும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ நேரடியாக சென்று பலாப்பழத்தை வழஙகினார்.

விசாரிக்கையில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததால் தன்னோடு பேரவையில் பணியாற்றிய அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தை வழஙகியதாக கூறப்பட்டது. ஒரு வழியாக பட்ஜெட் கூட்டத்தொடர் பலாப்பழத்தில் நிறைவடைந்தது.

author avatar
Savitha