தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
78

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் முறைகளில் முதன்மையான சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தமிழகத்தில் திமுக மற்றும் மத்தியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் நடந்த முஸ்லிம் மத சம்பந்தமான தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் தான் என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கும் அவர்களே முதன்மையான காரணமாக கருதப்பட்டு அவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதனையடுத்து பெரும்பாலான முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை நம்பியுள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. ஒரு நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை அறிவிக்கும் ஒவ்வொரு முறையும் டெல்லி சென்று வந்தவர்கள் எண்ணிக்கை என தனியாக அறிவிப்பதை சுகாதார துறை நிர்வாகிகளும் கடைபிடித்து வந்தனர்.

இந்நிலையில் இதனை எதிர்த்து முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்று வந்தவர்கள் என்று இனி தமிழக அரசு பிரித்து அறிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். அதைவிட்டு கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தும் பணியை மட்டுமே துரிதபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Kalyana Raman BJP
Kalyana Raman BJP

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாக இருந்த இந்த டெல்லி முஸ்லிம் மத தப்லிக் மாநாட்டிற்கு சென்று வர திமுகவின் தருமபுரி எம்பி தான் உதவியதாக பாஜக ஆதரவாளர் கல்யாண ராமன் குற்றம் சாற்றியுள்ளார். மேலும் இதன் பின்னணியில் திமுக தலைமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

தர்மபுரி எம் பி மூலமாகத்தான் தமிழக தப்லீக் ஜமாத் கும்பலுக்கான பயணம், தங்கும், உணவு ஏற்பாடுகளும் டெல்லியில் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. உபிஸ் மொத்தத்தில் இந்த வித செலவீனங்களுக்காக 25 கோடிகள் ஒதுக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் வருகின்றன

https://twitter.com/BjpKalyaan/status/1254878756084178944

மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து எதிர்த்து வந்த திமுகவினருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாஜக ஆதரவாளரான கல்யாண ராமன் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக திமுக எம்பியும் திராவிட ஆதரவு மற்றும் CAA போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரிலும் தெரிவித்து வந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி வந்தன. இந்நிலையில் திமுக எம்பி மீது இவர் சுமற்றிய இந்த குற்றசாட்டு எந்த அளவிற்கு உண்மையானது என்பது குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

author avatar
Ammasi Manickam