சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்

0
91
H Raja-News4 Tamil
H Raja-News4 Tamil

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி மத்திய அரசை விமர்சிக்கிறேன் என பிரதமர் என்றும் பார்க்காமல் கல்லால் அடிக்காமல் விட்டார்கள் என்று பொது வெளியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதற்கு எதிர்வினையாற்றிய பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் சகோதரி எம்பியா இல்லை நாலாந்தர.. என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு இரு தரப்பிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பாஜக தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தனது பங்கிற்கு கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்,” எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாஜக பிரமுகரை கண்டித்து பதிவிட்ட திருமாவளவனை பாஜகவின் தேசிய செயலாளர் ஹச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர் திருமாவளவன் இதற்குண் சரக்கு மிடுக்கு என மற்ற சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசியதை உதாரணமாக காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை. அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி இடம் வந்து படுக்கிறார்கள். 10 மாதம் …, என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Ammasi Manickam