எல்லாம் நடிப்பா கோபால்? பாவனியை சமூகவலைதளத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

0
77

பிரபல விஜய் தொலைக்காட்சியின் சின்னத்தம்பி சீரியல் இன் மூலமாக பிரபலமான பவானி அதன்பிறகு பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்றார். இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட போட்டிக்கு தகுதி பெற்றார். சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்றால் பிக்பாஸ் வீட்டில் தான் அவர்களுடைய இறந்து போன கணவரை பற்றி பேசி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அத்தோடு ப்ரீஸ் டாஸ்க்கின் போது ராஜு அவருடைய மனைவியுடன் பாசத்துடன் பேசி பழகியபோது பிரியங்காவிடம் தன்னுடைய கணவன் தொடர்பாக கண்ணீருடன் நினைவுகூர்ந்தார் என்றும், சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் பிக்பாஸ் தங்கள் இருவரையும் கோபமாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பார் என்றும் கூறினார்.

அதோடு தன்னை பாதியில் இப்படி தவிக்க விட்டு சென்று விட்டார் தன்னுடைய கணவர் என்று பிக்பாஸ் வீட்டில் பொய்யாக நடிக்கிறார் என சின்னத்திரை அரங்கில் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டது.

ஏனெனில் கணவர் இறந்த பின்னர் தொழிலதிபர் அனந்த ஜாய்யுடன் டேட்டிங் செய்தது மட்டுமல்லாமல் அதன்பின்னர் தாய்லாந்து சென்று அனந்த ஜாய்யுடன் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதன் பின்னர் கணவன் இறந்து போன இரண்டு ஆண்டுகளில் புதிதாக பங்களா ஒன்றை கட்டி அவர் கணவருடைய ஸ்தானத்தில் ஆனந்த ஜாயை அமரவைத்து பூஜைகளை செய்து அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இப்படியாக பிக்பாஸ் வீட்டில் கணவனை இழந்த மனைவியாக கருணையினை தேடிய அவர் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் ஓரளவு நேர்மையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். கணவன் குறித்து வருத்தத்துடன் பதிவிடும் சமயத்தில் இரண்டாவது காதலன் தொடர்பாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்பது தற்போது சமூக வலைதள வாசிகளின் இடையே எழும் கேள்வியாக இருக்கிறது.

அதோடு அவர் பிக் பாஸ் வீட்டில் வருத்தத்துடன் காட்சியளித்தது அனைத்தும் நடிப்புதான் என்று காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் சமூக வலைதள வாசிகள்.