அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

0
61

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர்கள் ஏதோ சொல்ல அதற்குக் கோபமான பென் ஸ்டோக்ஸ் ஆத்திரத்தில் கத்தினர். கேமராவில் அவர் ‘தைரியம் இருந்தால்  இதை வெளியே வந்து சொல் பார்ப்போம்’ எனக் கூறியது தெளிவாகக் கேட்டது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியது.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் தனது டிவிட்டரில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் ‘எனது செய்கைக்காக நான் வருந்துகிறேன். ஆனால் மைதானத்தில் தொடர் கூச்சல் இட்டு ரசிகர்கள் வெறுப்பேற்றியதால் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆனால் எனது செய்கை எந்த விதத்திலும் சரியானது அல்ல எனப் புரிந்துகொண்டேன். இந்த தொடர் முழுவதும் ரசிகர்கள் இரு அணியினையும் சிறப்பாக உற்சாகப் படுத்தினார்கள். இந்த ஒரு சம்பவம் அதை மாற்றி விடாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸை அவ்வளவு கோபப்படுத்தும் அளவுக்கு அப்படி என்ன சொன்னார் அந்த ரசிகர் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் ‘பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து பாடகர் எட் ஷீரனுடன் ஒப்பிட்டு ஏதோ கூறியதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் சிறந்த கிரிக்கெட்டர் விருதை பென் ஸ்டோக்ஸ் ஐசிசி யிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K