கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்! 

0
88
Because of what her husband's mother-in-law did!..The woman committed suicide by posting a video!
Because of what her husband's mother-in-law did!..The woman committed suicide by posting a video!

கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்!

உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான்  மந்தீப் கவுர்.இவருடைய வயது 30 இவர்  சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.இவருக்கும் அதே பகுதியிலுள்ள லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில்  பார்த்து  நடந்த திருமணம் ஆகும்.இந்நிலையில்  இவர்களுக்கு 6  வயது மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தை அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் ரஞ்சோத்பீர் சிங் சந்துவிற்கு ஆண் குழந்தை வேண்டி பல வருடங்களாக மந்தீப் கவுரை  கொடுமை படுத்தியும்  சித்திரவதை செய்தும் வந்துள்ளார். இதனால் மனம் நொந்த அவர்  மந்தீப் கவுர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அந்த வீடியோவில் என் கணவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்தி வருகின்றார்.

இதற்கு மேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள சக்தி இல்லை.என் கணவர் அடிப்பதற்கு எனது மாமியாரும் உடந்தையாக இருக்கிறார்.மேலும் அவரை தூண்டிவிடுகிறார் என தெரிவித்துள்ளார்.இந்த தகவலை அறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K