கை மற்றும் காலின் சருமங்கள் பொலிவு பெற இதை செய்யுங்கள்

0
56

சிலருக்கு முகத்தை ஒப்பிடுகையில் கை மற்றும் காலின் நிறம் கருமையாக இருக்கும் இதற்கு காரணம் கை மற்றும் கால் சருமம் வெயிலில் அதிகமாகப் படுவதால் கருமையாக இருக்கும்.கருமையான சருமத்தை வெண்மையாக இதோ உங்களுக்கான டிப்ஸ்

தேவையான பொருட்கள் :

பச்சைப்பயிறு ஒரு கப், ஆவாரம்பூ, வீட்டில் அரைத்து பொடி செய்த மஞ்சள்,கடலை மாவு

செய்முறை :
பச்சைப்பயிறு மற்றும் ஆவாரம்பூவை 50 கிராம் அளவு போட்டு அரைத்து அதில் 25 கிராம் மஞ்சள் பவுடர் மற்றும் 25 கிராம் கடலை மாவு சேர்க்க வேண்டும்.

இதில் சிறிதளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து தினமும் குளிக்கையில் பூசி வருகையில் சருமம் பொலிவு பெறுவதோடு மெண்மையாகவும் இருக்கும்.

மஞ்சள் சேர்ப்பதால் கை மற்றும் கால்களில் இருக்கும் முடிகள் கொட்டிவிடும்.

author avatar
Pavithra