தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்! நீங்களும் ட்ரை பண்ணுங்களே

0
85

தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்! நீங்களும் ட்ரை பண்ணுங்களே

 

தினமும் தலை சீவும் போது கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா? இதனை நினைத்து அதிக மன வேதனை அடைகிறீர்களா? இப்படி உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையிலேயே உள்ளது.

 

உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு தான். இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் பூண்டு.

 

குறிப்பாக நாம் உண்ணும் உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு, மிக அதிக அளவு ஊட்டச்சத்தை கொண்ட ஒரு உணவுப்பொருள்.

 

இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயல்புரிகிறது. இந்த பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட பண்புகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன.

 

இதற்காக பூண்டு எவ்வாறு வேலை புரிகிறது?

 

பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது.

 

மூலப்பொருட்கள்:

 

பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.

 

பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது .

 

பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

 

முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து அங்குள்ள அடைப்பைப் போக்குகிறது. இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.

 

தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு அற்புதமான தீர்வைத் தருகிறது.

 

அந்த வகையில் பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

 

தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது.

 

செய்முறை:

 

இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 

தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி அதில் பூண்டைச் சேர்க்கவும்.

 

இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும்.

 

அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் நன்றாக ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

 

இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்கள் முடி கிடுகிடுவென வேகமாக வளரும்.