பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

0
66

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் பகுதியைச் சேர்ந்த 5 காரில் சென்று கொண்டிருந்தனர்.

காருக்கு எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே 5 பேரும் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேனர் வைக்கப் போகி மின்சாரம் தாக்கி 3 பேரும் காரில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற 5 பேர் என ஆக மொத்தம் எட்டுபேர் பவன்கல்யாண் பிறந்தநாளில் இறந்தது அந்த மாநிலத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்தை அறிந்த பவன் கல்யாண்  உயிரிழந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தந்துள்ளார். அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை திரையுலகப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

author avatar
Parthipan K