மக்களே உஷார்! அனைத்தும் உங்களுடையது! இனி இப்படி செய்யாதீர்கள்.

0
82

கடந்த 2016 இல் வங்கிகளில் குறைவான இருப்புதொகை உள்ள வாங்கி கணக்குகளில் இருந்து அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதை அடுத்து குறைவான அளவில் இருப்புதோகை உள்ள வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. இது பலதரப்பினரிடையே பேசும் பொருளாக இருந்தது.

இது பல விதிமுறைகளில் அடிப்படையில் அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அடிப்படையும், நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அபராதமும், மாநகரங்களில் ஒரு அபராதமும், பிடித்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித வைப்புத்தொகையும் வைத்திருக்கத் தேவையில்லை.

இதுதவிர மற்ற வங்கிக் கணக்குகளில் வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அதை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக 2016-17 முதல் 2018-19 வரையிலான 3 ஆண்டுகளில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

தனியார் வங்கிகள்

2016-2017 ஆம் ஆண்டு -ரூ.790.22 கோடி

2017-2018 ஆம் ஆண்டு – ரூ.3,368.42 கோடி

2018-2019 ஆம் ஆண்டு – ரூ.1,996.46 கோடி

பொதுத்துறை வங்கிகள்

2016-2017 ஆம் ஆண்டு – ரூ.1,115.44 கோடி

2017-2018 ஆம் ஆண்டு – ரூ.1,138.42 கோடி

2018-2019 ஆம் ஆண்டு – ரூ.1,996.46 கோடி

இவ்வாறாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிடித்த அபராதம் இவ்வளவாய் இருந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் வங்கி கணக்கு எப்போதும் குறைவாக இருப்பு தொகை வைத்திருப்பர். இதிலிருந்து அபராதம் பிடித்தால் அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு இதை பரிசீலிக்க வேண்டும். என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K