ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

0
81

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி, ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட காது குடையும் குச்சி,  பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை, ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மோகோல் ஆகியவற்றுக்கு தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்,  பத்திரிகைகள், சிகரெட் அட்டைகளுக்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூறு மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்களுக்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதிக்குள் வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

author avatar
Parthipan K