12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

0
130

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். அந்தப் பெண் இந்தச் சிறுவனிடம் ஆபாசமாக பேசி பழக ஆரம்பித்து உள்ளார். அந்தச் சிறுவனும் நெருங்கி பழக ஆரம்பித்து உள்ளார். நாளடைவில் இது கள்ளத்தொடர்பை மாறியுள்ளது.

 

இருவரும் சந்தித்து தனிமையில் உல்லாசமாக உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்ததும் எவ்வளவோ முறை அந்த பையனிடம் எச்சரித்துள்ளனர்.

 

ஊர்மக்கள் திட்டியதும் அந்தப் பையன் அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் சிறு வயது பையனை தொல்லை படுத்தியுள்ளார்.

 

பின்னர் இதை பார்த்த ஊர்மக்கள் எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை என்பதற்காக நூதன முறையில் அந்த இளைஞருக்கு தண்டனை கொடுத்துள்ளனர்.

 

அந்த வாலிபருக்கு சேலை கட்டி, பொட்டு வைத்து, பூ வைத்து, கையில் வளையல் அணிவித்து, பெண்ணை போலவே வேடமிட்டு கை கால்களில் சங்கிலி கட்டி ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டு உள்ளனர். பின் அந்த போலீசார் கிராம மக்களை திட்டி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

 

இதைப்பார்த்து இணையவாசிகள் ஏன் அந்தப் பெண்ணுக்கு தண்டனை கொடுக்கவில்லை என கொதித்தெழுந்த வருகின்றனர்.

author avatar
Kowsalya