சபரிமலை வாசன் ஐயப்பன் அவதரித்த வரலாறு!

0
232

ஐயப்பனின் தரிசனத்தைப் போல அவருடைய அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னதமான வரலாறு.

பாலவ மகேஷின் மகளான லீலாவதி ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தார். தன்னுடைய சகோதரன் மகிஷாசுரனை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தால் வரம் பெற்ற அவள் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினாள்.

பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக ஐயப்பன் அவதாரம் நடந்தது. ஹரிஹர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டு விட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.

காட்டுக்கு வேட்டையாட வந்த சந்தோள நாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்ற பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான். இந்த நிலையில், ராணி ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தார். மந்திரியின் துர்போதனையின் காரணமாக அவள் மதி மயங்கினாள் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

ராணி தலைவலியின் காரணமாக துடித்தார். ராணியை குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்று தெரிவித்தார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலி பாலை கொண்டு வர 12 வயதான மணிகண்டன் புறப்பட்டார்.

பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றது. அதன் முடிவில் மகிஷி வீழ்ந்தால் லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். ஐயப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து சரணடைந்தாள்.

ஆனால் ஐயப்பன் தான் நித்திய பிரம்மச்சாரி என்று தன்னைத் தேடி கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக தெரிவித்து தன்னுடைய இடப்பக்கத்தில் மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக வீற்றிருக்க அருள் பாலித்தார்.

அதன் பிறகு இந்திரன் புலி வடிவம் எடுத்து ஐயப்பனை தாங்கிட அதன் மீது ஏறியபடி நாடும் திரும்பினார் ஐயப்பன் அதை கண்டு மிரண்டு போன ராணி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை எடுத்து கூறி தர்ம சாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார். இதைக் கேட்டவுடன் ராஜசேகர் மன்னன் மனம் உடைந்தார். அவர் திருப்திக்காக ஐயப்பன் சபரிமலையில் தங்கியிருக்க சம்மதம் தெரிவித்தார்.

பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தள மன்னன் கோவில் ஒன்றை கட்டினார். பரசுராமர் அங்கு ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்று அழைக்கப்பட்டது. இருமுடி கட்டி தம்மை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வருடம் தோறும் மகர சங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.