கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

0
166
#image_title

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. இவர் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வாழ்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை பரிந்துரை செய்தார்.

ஆனால் அதற்கு பிறகு திரைப்படத்திற்கான பணிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கங்குலி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கங்குலியாக நடிக்க பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா அவர்களிடம் பேச்சு வாரத்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஆயுஷ்மான் குராணா பதாய் ஹோ, ஆர்டிகள், டோனர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.