நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

0
164
Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!
Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு 2 வது சுற்று முடிவில் நிரப்பப்படவில்லை என்றால் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிடும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 2021ல் இந்த நடைமுறையானது மாற்றப்பட்டது.அந்த வகையில் மீதம் உள்ள இடங்கள் திருப்பி அனுப்பப்படாமல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ,அகில இந்திய கலந்தாய்வு இறுதி சுற்று வரை நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது முடிந்திருக்கும் 2 வது சுற்று முடிவில் சென்னைமருத்துவக் கல்லூரி ,ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ,மதுரை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 345 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளது.

மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 318 இடங்கள், என்.ஆர்.ஐ பிரிவில் மொத்தம் 201 இடங்கள் ,மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 24 இடங்கள் ,இ.எஸ்.ஐ.சி  கல்லூரியில் 4 இடங்கள் என மொத்தம் 892 இடங்கள் காலியாக இருக்கின்றது. இந்த இடங்கள் அனைத்தும் இறுதி சுற்று மூலம் நிரப்பப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K