பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!

0
128

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!

பொதுவாக பெண்கள் சமைக்கும் பொழுது கால விரயம் ஏற்படுவது என்று கருதி நிறைய தவறான விஷயங்களை செய்து வருகின்றார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள்.முதலில் எந்த பொருட்களை சமைப்பதற்கு முன்பும் அதை நன்கு அலச வேண்டும்.

புளி:முதலில் ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளியை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும். ஊற வைப்பதற்கு முன்பு ஒரு முறை தண்ணீரில் போட்டு அழுத்தம் கொடுக்காமல் லேசாக அரசியல் கணினி கீழே ஊற்றிவிட்டு பின்பு வேறொரு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.

முட்டை:முட்டையை கடையிலிருந்து வாங்கியவுடன் அப்படியே தண்ணீர் ஊற்றி வேக வைப்பது வழக்கம் ஆனால் முட்டை ஓட்டின் மீது கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது ஆகையால் முட்டையை வாங்கியவுடன் ஒருமுறை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பிறகு பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

 

வெங்காயம்:சமைக்கும் பொழுது எந்த ஒரு பொருட்களையும் அதிக அளவிற்கு மேல் கருக விடக்கூடாது அவ்வாறு கருகி தீர்ந்து போன உணவு பொருட்களின் மூலம் நமக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள் ஆகையால் உணவுப் பொருட்களை ருசிக்காகவும் அழகுக்காகவும் அதிக அளவில் வதைக்கு கருக விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து பொருட்களையும் பயன்படுத்தும் முறையில் அதிகம் கவனம் செலுத்தி சமைப்பதன் மூலம் நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.

 

author avatar
Parthipan K