பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது!

0
124
Attack on Rowdy in broad daylight! 2 arrested for public misconduct
Attack on Rowdy in broad daylight! 2 arrested for public misconduct

பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது!

சென்னையில் சூளைமேடு நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் எலி கார்த்திக். 27 வயதான இவர்  ஒரு ரவுடி. இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மீது பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. மேலும் அவர் மீது படாமல் குறி தவறி அருகில் நின்றிருந்த கார் மீது பட்டு உடைந்து சிதறியது.

ஆனால், அதிர்ஷ்ட வசமாக காருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மேலும் அவரும் உயிர் தப்பியுள்ளார். இந்த தாக்குதல் நடத்திய 2 பேர் தப்பி ஓடி உள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விடாமல் விரட்டி சென்று பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அந்த இருவரையும் ரோந்து போலீசாரிடமும் ஒப்படைத்தனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து அவர்களை விசாரிக்கும் போது, அவர்களில் ஒருவர் ஸ்ரீராம் 20 வயதான நபர் என்றும், இன்னொருவர் சாம்ராஜ் என்ற 19 வயதான நபர் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த வாரம் இவர்கள் இருவரையும், தனது ஏரியாவுக்குள் வரக்கூடாது என்று கத்தியை காட்டி எலி கார்த்திக் மிரட்டி உள்ளார். அதன் காரணமாக பழிக்குப் பழி என்ற வகையில் அவர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக கைதான இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பட்ட பகலிலேயே நடந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எலி கார்த்திக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.