தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

0
88
Athlete passes away! Leaders who expressed condolences!
Athlete passes away! Leaders who expressed condolences!

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

கொரோனா நோய் தொற்று நம்மில் பல பேருக்கு பெரும் இழப்புகளை தந்து கொண்டே உள்ளது. அதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள்.

தற்போது முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் 91 வயதான இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதன் பின் கொடுக்கப்பட்ட மருந்துகளின் மூலம் அவரின் உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கேட்டதற் கிணங்க அவரை வீட்டிற்கு அனுப்பினர்.

மீண்டும் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு மீண்டும் திடீரென ஆக்சிஜன் குறைப்பாடு ஏற்பட்டதால் மீண்டும் சண்டிகரில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டார்.

அங்கு அவருக்கு ஐ.சி.யு வில் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பற்றி பிரதமர் மோடி கூறிய இரங்கல் செய்தியில், தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம்.  விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களுக்கு தன்னையும் நேசிக்க வைத்தது என கூறியுள்ளார்.

அதே போல், உள்துறை மந்திரி அமீத் ஷா கூறிய இரங்கல் செய்தியில், அவர் உலக தடகளத்தில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறார். அவரை இந்திய விளையாட்டுகளின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராக தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.