முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

0
86
#image_title
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று 800 ஆவணங்களுடன் கூடிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்பட 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நீதிதுறை நீதிமன்றம் எண் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி இமயவரம்பன், ஆய்வாளர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் இந்த 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப் பத்திரிக்கையில் 10000 பக்கங்கள் கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நீதிபதி இந்த குற்றப் பத்திரிக்கை முழுவதையும் படித்துவிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு சம்மன் அனுப்பவது குறித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.