மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக! 

0
164
#image_title

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த மூட்டு வலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக் கூடியதாக இருந்தது .ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் இந்த மூட்டு வலியானது ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது. எந்தவிதமான மாத்திரை மருந்துகளை உட்கொண்டாலும் சரியாவதில்லை. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு இந்த மூட்டு வலியை சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சல்பர் மூட்டுகளில் உள்ள வலிகளை நீக்கி குணமாக்கக்கூடிய தன்மை கொண்டது. மேலும் ஒரு சிலருக்கு உடலில் கால்சியம் குறைபாடு இருந்தாலும் இந்த மூட்டு வலியானது வரக்கூடும். இந்த பெரிய வெங்காயத்தை தோள் நீக்கி விட்டு நன்றாக சீவி கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மஞ்சத்தூளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இது மூட்டு தேய்மானத்தை சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது. பிறகு இதனுடன் 1/2ஸ்பூன் சுக்குப்படி இது எலும்புகளுக்கு நல்ல வலுவை கொடுக்கக் கூடியது.

மேலும் மூட்டுகளில் உள்ள வலிகளை சரி செய்யக்கூடிய தன்மை கொண்டது. இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி அதனுடன் நாம் கலந்து வைத்துள்ள பேஸ்டை போட்டு அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இதனை எடுத்து மூட்டு வலி உள்ள இடங்களில் போட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு துணியால் கட்டி ஒரு மணி நேரம் முதல் 8 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மூட்டுகளில் உள்ள அனைத்து விதமான வலிகள் தீர்ந்துவிடும்.

author avatar
Parthipan K