நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

0
136
Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!
Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

நாமக்கல்  மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுக்கா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது  மனைவி சகிலாபானு . இவர்களின்  மகள் ஜெஸ்சியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார்.

மேலும் அதனால் ஜெஸியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள புத்துனாரு காவேரி நகரில் வசித்து வந்தார். இதனையடுத்து சர்புதீன் தனது மகள் ஜெஸியாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அதனால் மனைவியை இழந்த மணமகனை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தார்.

இந்த முடிவானது ஜெசியாவிற்கு பிடிக்காத காரணத்தால் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் முதன் முதலில் திருமணம் செய்யும் நபரையே தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆனால் சர்புதீன் மனைவியை இழந்த நபருக்கு ஜெஸியாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் இதனால் ஜெஸ்சியா  மனம்முடைந்து காணப்பட்டார்.

மேலும் இந்நிலையில் நேற்று ஜெஸ்சியா தனது அறையில் இருந்து வெகு நேரம் ஆகியும் வெளியே வராத காரணத்தால் அவரது தாய் சகிலாபானு ஜெஸ்சியாவின் அறைக்கு  சென்று பார்த்தார் அப்போது ஜெசியா அவரது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட சகிலாபானு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.

மேலும் இந்த தற்கொலை குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் ஜெஸ்சியாவின்  வீட்டிற்கு வந்த போலீசார்  தற்கொலை செய்து கொண்ட ஜெஸ்சியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K