சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

0
183
#image_title

சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் தட்டி கேட்ட ஆசிரியை உடன் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம் போல் நேற்று ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 7 வயது சிறுமி ஒருவரிடம் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கன்னத்தைக் கிள்ளி, தடவி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை வகுப்பறையில் இருந்து கவனித்த ஆசிரியர் வெளியே வந்து இரண்டு வாலிபர்களையும் எச்சரித்துள்ளார். அப்போது அந்த இரண்டு வாலிபர்களும் ஆசிரியை உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சத்தத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.