இதுதான் நயன்தாராவா? பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம் என்ன?

0
82
Is this Nayanthara? What is the secret revealed by the famous actress?
Is this Nayanthara? What is the secret revealed by the famous actress?

இதுதான் நயன்தாராவா? பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம் என்ன?

தமிழ் உலகில் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா திகழ்ந்து வருகிறார். நயன்தாராவை பிடிக்காத ரசிகர்களே இல்லை அவர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றினாலும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தான் அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. தொடக்கத்தில் அவர் சரியான படங்களை தேர்ந்தெடுக்கப் படாததால் இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இந்த தோல்விகளிலிருந்து தளராமல் தனது விடாமுயற்சியால் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார். இப்போது தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை என்றால் முதலில் சொல்லப்படுபவர் நயன்தாரா தான். இந்நிலையில் நயன்தாராவை பற்றி சிலர் நிறைய சர்ச்சைகளை எழுப்பியுள்ளார்.நயன்தாரா எல்லாவற்றையும் எளிதில் நம்ப கூடியவர்.

யார் எது கூறினாலும் உடனே நம்புபவர். எல்லாவற்றையும் நம்பியதால் தான் இப்போது இவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.இதைப்பற்றி ஒரு பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் நயன்தாராவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் செம ஹிட்டாகி உலகெங்கும் பரவி வந்தது. அப்படத்தில் தான் நான் நயன்தாராவிற்கு அம்மாவாக நடித்திருந்தேன்.

சரண்யா அந்த பேட்டியில் கூறுகையில் நயன்தாரா யாருடனாவது பேசாமல் அமைதியாக இருந்தால் அவர் மோசமாக ஆளாக இருப்பார் என்று நினைக்க கூடியவர்.நயன்தாரா எல்லாவற்றிற்கும் உண்மையாக நேர்மையாக இருக்க கூடியவர் அதனால் அவரை யாராவது துன்புறுத்தி நாளும் கேலி செய்தாலும் உடனே அங்கிருந்து ஒதுங்கி விடுவார்.
சினிமாவில் இருக்கும் நயன்தாரா தனக்கு பிரச்சனை வந்தவுடன் பிரச்சனைகளில் ஏற்பட்ட நபர்களிடம் சற்று ஒதுங்கியே ,இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியத்துடன் இருந்தேன் என்பதை சரண்யா பொன்வண்ணன் பேட்டியில் கூறியுள்ளார்.

சில நேரத்தில் நயன்தாராவிடம் இச்செயல்களை கேட்டேன் அப்போது அவர் இதற்கு அளித்த பதில் பேசுபவர்கள் அப்படி தான் பேசிக் கொண்டே இருப்பார்கள் அவைகளை எல்லாம் நான் கண்டுகொண்டாள் பல பிரச்சினைகளுக்கு நாம் அடிமையாகி விடுவோம் அதனால் அவைகளை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவேன் என்றாராம். இப்படிப்பட்ட குணம் உடையவர் தான் இவ்வளவு பிரச்சனைகளை கடந்து இப்போது பெரிய நடிகையாக வலம் வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரையும் பெற்று நிலைத்து நிற்கிறார்.

author avatar
Parthipan K