மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
87

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார். அந்த வெற்றியை அடுத்து 90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்து குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்தது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமி இப்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரியா மணி, பிரேம்ஜி அமரன், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.