சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகல்

0
61
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். அதில் சென்னை நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தனது சொந்த பிரச்னை காரணமாக மீண்டும் இந்தியாவிற்கே திரும்பினார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
author avatar
Parthipan K