நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

0
172
#image_title

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி என்ற உதவி இயக்குனர், பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அஜித் நடித்த சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாக மனுவில் கூறியுள்ள அவர், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறியிருந்ததாகவும், அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

author avatar
Savitha