திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்!

0
261
Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!
Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை பெற்று செல்கின்றனர். இதனை தடுக்க தேவஸ்தான நிர்வாகம் பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அந்த அடிப்படையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தான முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொழில்நுட்பம் வாயிலாக லட்டு பிரசாதம் வாங்குவது மற்றும் தங்கும் அறைகளை பெறுவது போன்றவற்றுக்கான கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். திருப்பதிக்கு வரும் பக்தர் ஒருவர் அதிகமான டோக்கன்கள் வாங்குவதை தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளது.

வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக அடையாளம் காணும் முறையானது அறிமுகப்படுத்தப்படும். திருமலை கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் தங்கும் வசதி குறித்து தற்போதுள்ள அமைப்பில் இருக்கும் ஊழலை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K