ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

0
52
Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!
Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் மது போதையின் காரணமாக தனது மனைவியிடம் இரவு நேர உணவு பரிமாறும் படி கணவன் கூறியுள்ளார். ஆனால் ஹரமணி உணவு பரிமாற சற்று தாமதமாகியுள்ளது. அதன் காரணமாக ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே மாறி, மாறி வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் அருகிலிருந்த கட்டையால் தனது மனைவியின் தலையில் கடுமையாக கணவன் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த இடத்திலேயே துடிதுடித்து ஹரமணி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் ஹரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் உணவு பரிமாற தாமதமானதன் காரணமாக மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையின் வெறி நம்மை எங்கே அழைத்து சென்றுள்ளது பார்த்தீர்களா? வேண்டாம் இந்த குடிபழக்கம். நன்றாக இருக்கும் வாழ்கையை நாமாக ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும்.