தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

0
75

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறன் குறைவாக உள்ளது. இதனால் பள்ளி நேரத்திற்குப் பின் ஆங்கிலப் பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.