பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

0
149
#image_title

 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுப்பற்றி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ,

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா பிரதான சாலை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக உத்தேசம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் 6-ஆம் தேதி அதாவது நாளை முதல் 12 ஆம் தேதி வரையிலும் ஆற்காடு சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு,

  • ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா காலனி 1-வது  பிரதான சாலையில் இருந்து அம்பேத்கர் சாலை வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் அம்பேத்கர் சாலைக்கு   ஆற்காடு சாலை வழியாக  செல்லும் வழி தடை செய்யப்பட்டு , அதற்கு பதிலாக யுனைடெட் இந்தியா காலனி 1-வது பிரதான சாலை,   ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம்.
  • யுனைடெட் இந்தியா காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோல் விஸ்வநாதபுரம் பிரதான  சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, 2-வது குறுக்குத்தெரு, மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
  • விஸ்வநாதபுரம் சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராய நகருக்கு செல்ல ஸ்டேஷன் வியூ சாலை, பசுல்லா மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அதேபோல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் இருந்து ஒருவழி பாதையில் ஆற்காடு சாலையில் 2-வது அவென்யு வரை தற்போது நடைமுறையில் உள்ளது. மேற்கண்ட சாலையானது ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரையிலும் இருவழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை, பாளையக்காரன்  சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
  • இந்த மாற்றங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.