முதல்வரிடம் திருமண நாள் வாழ்த்து பெற்ற நடிகை !

0
109

தமிழ் மற்றும் சில மொழிகளில் பல நல்ல படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் அரசாட்சியில் எம்.எல்.ஏவாக பணியாற்றி வருகிறார்.

அதை தொடர்ந்து அவரது திருமண நாளான நேற்று அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து தனது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.பல திரை பிரபலங்களும் அரசியல் வாதிகளும் அவரது நண்பர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இதனை அடுத்து ரோஜா அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ஆன நடிகை ரோஜா அவரது கணவர் மற்றும் அவருடைய மகன் மகள் ஆகியோர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்தித்து பேசிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனை ரோஜா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K