பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

0
127
#image_title

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை-காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் – நீலா தம்பதியினர், இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர்.

தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தாய் நீலா உறங்கிக் கொண்டிருந்த நிலையில் மனவளர்ச்சிக்கு குன்றிய மகன் பேரருளாளன் வீட்டிலிருந்த அம்மி கல்லை தூக்கி தாய் தலை மீது போட்டு சென்றுவிட்டார். இதில் தாய் நீலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த நீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தாய் மீது கல்லை போட்டுவிட்டு சென்ற பேரருளாளனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Savitha