நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

0
82

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டார்,. அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்,.

ஆட்சியே கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அதிரும் அளவிற்கு பேசி அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் திரு. நாராயணசாமி,.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் இநாராயணசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்,. அதாவது புதுச்சேரி என்பது மாநில அந்தஸ்து கிடையாது அது ஒரு யூனியன் பிரதேசம் ஆகும்,. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கீழ் இயங்குகிறது,.

மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்த சட்டத்தையும் அமல்படுத்துவதற்கு யூனியன் பிரதேச அரசை கேட்க வேண்டியதில்லை,. ஏனென்றால் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் நேரடியாகவே சட்டத்தை அமல்படுத்தலாம்,.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் என்பதால் இது போல் பேசி அக்கட்சியின் தலைமையிடம் நற்பெயரைக் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பேசி வருவதாக புதுச்சேரி பாஜகவினர் நாராயணசாமியை கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் அதிகாரம் மோதல் காரணமாக எந்தத் திட்டமும் சரியாக செயல்படுத்தாமல் கிடப்பில் கிடக்கின்றது,.

இந்த சூழ்நிலையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, இதற்கு போர்க்கொடி காட்டினால், இநாராயணசாமி அவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் தனது ஆட்டத்தை காட்டுவார் என்பது தெளிவாக தெரிகிறது,. இதனால் புதுச்சேரி காங்கிரசார் அமித்ஷாவின் பார்வை நம் மீது திரும்பிவிடுமோ என்று புலம்பி வருகின்றனர்.

author avatar
Parthipan K