வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

0
173

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

விருட்சம் என்றால் வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள் ஆகும் . இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது.

சாதாரணமாக நாம் பரிகார நிவார்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் செய்கின்றோம். இவ்வாறு ஹோமம் செய்வதன் மூலம் நமக்கு பலன்கள் கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை.

அதற்கு மாறாக விருட்ச சாஸ்திரப்படி ஒரு மரத்தை நமக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்திற்காக நட்டு அதனை பராமரித்து வளர்த்து வந்தால் அம்மரம் உயிருடன் இருக்கும் ஆண்டுகள் வரை நமக்கு தொடர்ந்து பலன்கள் கிடைக்கும். நாம் நட்டு வைக்கும் மரம் வளர்ந்து பெரியதாகி நிறைய பேருக்கு பலன்தரும் வகையில் இருக்க வேண்டும்.

நாம் நினைத்த பலன் தான் நமக்கு கிடைத்து விட்டதே என நட்டு வைத்த மரத்தை வெட்டிவிடக்கூடாது. அவ்வாறு வெட்டினால் அம்மரத்தை வெட்டிய தோஷத்தினால் ஏற்படும் பலனை நம் தலைமுறையினர் தான் அனுபவிக்க நேரிடும்.

ஒருவேளை நாம் நட்டு வைத்த மரம் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து விட்டால் அதே மரத்தின் வேறொரு கன்றை நட்டுப் பாதுகாத்து வரலாம். இவ்வாறு இக்கன்று வளர்பதன் மூலம் நமக்கு நிறைய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விருட்சங்களை கோயில்களிலோ, வீட்டிலோ, வேறு ஏதேனும் ஒரு இடத்திலோ நட்டு வைத்தால் துயர் நீங்கி இன்பமுடன் வாழலாம்.இம்முறையில் நமக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கி வாழ்வில் அமைதியுடன் வாழ வழிசெய்யும்.

author avatar
Parthipan K