குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

0
134

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும்.

சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஆல்யமானசா கர்ப்பமான சூழலில் அவருக்கு சிறப்பான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் அந்த காதல் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதாவது “குட்டி இளவரசி” பிறந்ததை தனது இன்ஸ்டாகிராமில் ஆல்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. “தாயும் சேயும்” நலமாக உள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை என்றும் அப்போது மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் சஞ்சீவ் பப்பு குட்டிக்கு இன்னொரு பப்பு குட்டி வந்தாச்சு என்றும் குதூகலமாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது குட்டி இளவரசியின் அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். குழந்தையின் அழகான கைவிரல்களை மட்டும் பதிவிட்டு எல்லோரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  இப்படம் சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

author avatar
Jayachandiran