பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

0
75
Police in action in Erode district! 13 arrested
Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக அந்த மாணவியை கடந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கார்த்திக் கடத்திச் சென்றுள்ளார். எனவே இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வாலிபரிடம் இருந்து பத்திரமாக அந்த மாணவியை மீட்டு கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த மாணவியை கடத்திய கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று நபர்களான செண்பகராஜ் 27 என்ற நபர், மாரிமுத்து என்ற 19 வயதான நபர், மகாராஜா என்ற 23 வயதான மூன்று பேரையும் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக் மீது மட்டும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் அவருக்கு உதவி செய்த மற்ற மூன்று கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.