மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்!

0
120
All students should grow up with political consciousness! Minister Ponmudi's conversation!
All students should grow up with political consciousness! Minister Ponmudi's conversation!

மாணவர்கள் அனைவரும் அரசியல் உணர்வோடு வளர வேண்டும்! அமைச்சர் பொன்முடி உரையாடல்!

நேற்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அவர் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் கலைப் பிரிவில் 1613 பேர் மற்றும் அறிவியல் பிரிவில் 1597 என மொத்தம் 3210 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்கள் வழங்கினார்.அதனை தொடர்ந்து தயாநிதி மாறன் எம்.பி பேசினார் அவர் மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் சென்னையின் முதல் கல்லூரி மாநிலக் கல்லூரி தான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்திற்கு பல அரசியல் தலைவர்களை இந்த கல்லூரி கொடுத்துள்ளது என கூறினார். மேலும் கல்வி சொத்தை யாராலும் பறிக்க முடியாது. படிப்பிற்கு அடுத்தபடியான வேலைவாய்ப்பு தமிழ்நாட்டிலேயே கிடைக்கும். அந்த வகையில் முதல்வர் 4ஆம் தேதி பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

அதனால்  மாணவர்கள் நன்கு படித்து இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்க்கு பிறகு  அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அரசுக் கல்லூரி இந்த கல்லூரி தான். இந்த கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரிக் கனவு உள்ளிட்ட உயர்கல்வி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

மாணவர்கள் சமுதாயம் மற்றும் அரசியல் பற்றியும் படிக்க வேண்டும். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, முதல்வரின் உங்களில் ஒருவன் ஆகிய புத்தகங்களை படித்தால் போதும் தமிழ்நாட்டின் வரலாறு, சமூக அமைப்பு, அரசியல் பற்றிய தெளிவு கிடைக்கும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே சமுக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும்.

 மேலும் குறிப்பாக பெண் கல்வியை ஊக்கப்படுத்த முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.மாணவர்கள் படிக்கும் காலத்திலேய  சமூக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டு கொண்டார்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here